என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

23 March 2006

எழுத மறந்த நாட்குறிப்புகள்

வாழ்வின் அத்தியாவசியங்களில் ஒன்று பகிர்தல். எல்லோரும் எல்லா இடங்களிலும் எதையாவது யாருடனாவது பகிர்ந்துகொண்டேதான் இருக்கிறோம். அது ஒரு உணர்வாகவோ, எண்ணமாகவோ அல்லது பொருளாகவோ... எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பகிர்தல் மிக அவசியமாகிறது. phone, mobile phone, email, chat, blog என்று நமது தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை பகிர்தலை சார்ந்தே இருக்கிறன. பகிர்தல் இல்லாத ஒரு வாழ்வை நினைத்துப்பார்க்கவே முடிவதில்லை.

இதில் பெரிதும் பங்கு வகிப்பவர்கள் நண்பர்கள். வெகு அன்னியோன்யமான உணர்வுகளைக்கூட பகிர்ந்துகொள்ள, நமக்கு கிடைத்த வரம் நண்பர்கள். தன் வாழ்க்கைத்துணையிடம் கூட பகிர்ந்துகொள்ளாத விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்பவர்கள் அதிகம். ஓர் இனிய நட்பு வாழ்க்கைத்துணையாகவோ அல்லது வாழ்க்கைத்துணை ஓர் இனிய நட்பாகவோ அமையப்பெற்றவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.

பள்ளி நாட்களில், அமைதியாய் இருக்க பணிக்கப்பட்டும், கட்டுப்படுத்தவே முடியாமல் புருஷோத்தமனுடன் பேசி அடிவாங்கிய ஆசிரியர் வராத வகுப்புகள்தான் எனக்கு பகிர்தலின் அவசியத்தை முதன்முதலாய் உணர்த்தின. ஏதாவது ஒரு வகுப்புக்கு ஆசிரியர் வராவிட்டால் பக்கத்து வகுப்பு ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்து, "யார்டா இங்க மானிட்டர்..?" என்பார். கலர் வர்மா எழுந்து நிர்ப்பான். "பேசரவங்க பேரெல்லாம் board-ல எழுதி வை. வந்து கவனிச்சிக்கறேன்..." என்று சொல்லிவிட்டுப்போவார்.

எங்கள் வகுப்பு மானிட்டர் எங்களின் நெருங்கிய நண்பன் என்பதால் இரண்டு மூன்று எச்சரிக்கை சலுகைகள் கிடைக்கும். ஆனாலும் சிறிது நேரத்தில் எங்கள் பெயர்கள் தாங்கிய கரும்பலகை கலர் வர்மாவின் கடமை உணர்வைச்சொல்லும். அதைப்பார்த்த பின்புதான் நாங்கள் மறுபடி பேசியிருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியும்! எப்படியும் பிரம்பு அடி நிச்சயம் என்றான பின்பு மறுபடியும் பேசத்துவங்குவோம். என்ன செய்வது..?! பதிண்ம வயதுகள் புரிந்தும் புரியாமலும் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆயிரமாயிரம் ரகசியங்களை நண்பர்களிடம் மட்டும்தானே நாம் பகிர்ந்துகொள்ளமுடியும்! அப்பப்பா... எத்தனை ஆச்சர்யங்கள், பயங்கள், இன்ப அதிர்ச்சிகள், கேள்விகள், பதில்கள்!

நண்பர்களுடனான நமது பகிர்தல்கள் அட்சயப்பாத்திரம் போன்றவை. பேசப்பேச விஷயங்கள் தீர்ந்துபோவதில்லை. மறாக இன்னும் பல கிளைகளாக எல்லையற்றுப் பிரிந்து நீள்கின்றன. காலையில் எழுந்ததிலிருந்து அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும்வரை நிகழும் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட சேர்த்துவைத்து, அனைத்தையும் தொலைபேசியில் சொல்லித்தீர்த்தால்தான் இரவு தூக்கம் வரும் என்று சொல்லும் நண்பர்கள் நமக்கு இருக்கிறார்கள். நம் நெஞ்சைத்தொடுகிற எந்த ஒரு உணர்வும் யாருடனாவது பகிர்ந்துகொண்டாலொழிய முழுமையடைவதேயில்லை. இன்பங்கள் இரட்டிப்பாவதும், துன்பங்கள் பாதியாய் குறைவதும் பகிர்தலின்போதுதானே!

"ஏய்... நான் இங்க வடபழனி கோயில்ல இருக்கேன்டா. இங்க ஒரு குழந்தை என்ன cute தெரியுமா. அதும் மாம்பழ கலர் பட்டுப்பாவாடைல. செம சேட்டை பண்ணுது. நீமட்டும் பாத்த... அப்படியே கடிச்சி சாப்ட்டுடுவ!" - எங்கோ இருக்கும் என் தோழியை நிமிட நேரத்தில் எப்படியாவது வடபழனி முருகன் கோயிலுக்கு கொண்டுவந்து அந்த குழந்தையை அவளுக்கு காட்ட முடியாதா எனத்தவித்துப் பின் முடியாமல், தொலைபேசியில் அழைத்து சொல்லியிருக்கிறேன்.

"அருமையான படம்டா. frame by frame செதுக்கியிருக்கான். என்ன play தெரியுமா...?! ச்சான்சே இல்ல!" - படம் முடிவதற்கு முன்னாலேயே, இடைவேலையில் நண்பனை தொலைபேசியில் அழைத்து புலம்பியிருக்கிறேன்.

"ஹைய்ய்ய்யோ..! செம figure மச்சி..!!" - சாலையில் எதிரில் கடந்த அந்த பெண்ணின் காதில் விழக்கூடும் என்றுகூட யோசிக்காமல், பைக் ஓட்டிக்கொண்டிருந்த நண்பனின் தோளை இறுகப்பற்றியிருக்கிறேன்.

"அப்பா...! university level-ல second prize-பா." - பாரதிதாசன் university festivel-ல் painting-ல் பரிசு வென்றதை, அதிகாலையில் என் அழைப்புமணிக்கு கதவுதிறக்கப்போகும் அப்பாவிடம் சொல்லி அசத்தவேண்டுமென்று திருச்சியில் பஸ் ஏறியதிலிருந்து மனதிற்குள் ஒத்திகை பார்த்தபடி பயணித்திருக்கிறேன்.

இதுபோல சின்னதும் பெரிதுமாய் லட்சோபலட்சம் விஷயங்கள். ஒவ்வொன்றையும் பகிர்ந்த பின்புதான் மனம் நிறைவுற்றது. எவ்வளவு யோசித்தும் புரியவே புரியாத ஆச்சர்யம் அது. நாம் தான் அதை அனுபவிக்கிறோம். அதன் சுவை முழுதும் உணர்கிறோம். ஆனால் பகிர்ந்தால்தான் மனம் நிறைவுறுகிறது!

இங்கே எனது மன நிறைவிற்காய், என்னை பாதித்த பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். ஆனந்த விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "துணையெழுத்து" படித்தபோது அந்த வடிவம் என்னை மிகவும் கவர்ந்தது. கதை, கவிதை மாதிரி புனைவதற்கு யோசிக்காமல் உணர்ந்ததை உணர்ந்தபடி பகிர்ந்துகொள்ள உதவும் ஓர் அருமையான வடிவம் அது. சிறுகதையை ஒத்த கட்டுரைபோலவும், மென்மையான சிறுகதைக்கே உரிய ஒரு முடிவுடனும், படிப்பதற்கு அலாதியான வடிவம். படிக்கும்போது யாரோ நமக்கு கதை சொல்லிக்கொண்டிருப்பதுபோல் தோன்றச்செய்யும் இதமான வடிவம். அந்த வடிவத்திலேயே என் உணர்வுகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

கேட்ப்பவர்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது பற்றியெல்லாம் கூட கவலைப்படாமல் எதைப்பற்றியாவது சுவாரஸ்யமாய் சிலர் பேசிக்கொண்டேயிருப்பார்கள். எனது இந்த பகிர்தல்கள் கூட அப்படி இருக்கலாம்! ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் நான் கவலைபடப் போவதில்லை!! குறைந்தபட்சம், நான் எழுத மறந்த எனது நாட்குறிப்புகளின் ஒரு பதிவாகவாவது இவை இருந்துவிட்டுப்போகட்டுமே :)
Read More

17 March 2006

யார் இவர்?

கல்லூரி நாட்களில் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை செம போர் அடித்து உட்கார்ந்திருந்தபோது ஒரு வாரப்பத்திரிக்கையில் கண்ட புகைப்படம் ரொம்ப expressive-வா இருக்கேன்னு impress ஆகி பண்ணிய pencil sketch இது. சென்ற ஞாயிற்றுக்கிழமை செம போர் அடித்ததால் time pass-க்காக என் பொக்கிஷங்களை கிளறும்போது கிடைத்தது. உங்கள விட்டா வேற யார் கிட்ட இதெல்லாம் share பண்ணிக்க முடியும்?! பாத்திட்டு இது யார்னு சொல்லுங்க.



கரெக்டா சொல்லிட்டிங்கன்னா நல்லா வரைஞ்சிருக்கேன்னு அர்த்தம்! இல்லன்னா இது எப்பயோ பண்ணதுதானே இப்பொ வரைஞ்சிருந்தா நல்லா பண்ணியிருப்போம்னு மனச தேத்திக்கறேன் :)
Read More

14 March 2006

சங்கிலித் தொடர்...

உண்மை அவர்களின் அழைப்பை ஏற்று இத்தொடரில் நானும் இணைகிறேன்.

எவ்வளவோ மனிதர்களும், சம்பவங்களும் நிரம்பிய இந்த வாழ்வில், கீழே தொகுத்துள்ள ஒவ்வொன்றிலும் நான்கை மட்டும் குறிப்பிடுவது மிக கடினம். அதிலும் திரைப்படங்கள்... chance-ஏ இல்ல!இருந்தாலும்... இந்த சங்கிலித் தொடரின் நியதிக்கு உட்பட்டு மனதில் சட்டென தோன்றிய நான்குகள் இங்கே...

பணிகள்:
  1. கல்லூரி நாட்களில், A.V.C கல்லூரி மாணவர் இதழான "இளந்தூது" -வில் இணை ஆசிரியராக.
  2. அதே நாட்களில், "நுண் கலை மன்றம்" செயலாலர்.
  3. முதுகலை முடித்த பின் மூன்று ஆண்டுகளாக மென்பொருள் வல்லுனர்.
  4. இப்போது... நண்பனுடன் சேர்ந்து சொந்தமாக மென்பொருள் தயாரிக்கும் தொழில்.

பொழுது போக்குகள்:
  1. திரைப்படங்கள்.
  2. இசை கேட்ப்பது.
  3. தொலைபேசி அரட்டை (அ) கடலை.
  4. புகைப்படக்கருவியுடன் ஊர் சுற்றுவது.

திரைப்படங்கள்:
  1. கோகுலத்தில் சீதை. (எத்தனையோ படங்களை பலமுறை பார்த்திருந்தாலும், தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு காட்சிகள் பார்த்த படம் இது!)
  2. சலங்கை ஒலி.
  3. அழியாத கோலங்கள்.
  4. மல்லி. (சந்தோஷ் சினவின் குறும்படம்).

வாழ்ந்த இடங்கள்:
  1. குடியாத்தம்(குடியேற்றம்).
  2. கடலூர்.
  3. மாயிலாடுதுறை.
  4. சென்னை.
(சொந்த ஊர்களான சோழன்குடிக்காடு கிராமமும், விருத்தாசலமும் அவ்வப்போது விடுமுறைக்கு சென்றுவந்த இடங்கள்!)

உணவு வகைகள்:
  1. பழைய இட்லி வீணாகக்கூடாதென செய்கிற இட்லி உப்மா முதற்கொண்டு அம்மா சமைக்கிற அனைத்தும்.
  2. pizza & burger.
  3. egg briyani.
  4. கடலை மிட்டாய்.
காதலித்த பெண்கள்: எல்லாமே ஒருதலை காதல்தாங்க! :(
  1. ஒண்றாம் வகுப்பில் கரிய விழிகளும், சுருள் முடியும், துடுக்குப்பேச்சுமாய் என்னைக்கவர்ந்த ஷண்முகப்பிரியா.
  2. ஓசை படம் பார்த்ததிலிருந்து இன்றுவரை பேபி ஷாலினி.
  3. +1, +2 chemistry tution-ல் வகுப்புக்கு வந்தாலும் வராவிட்டாலும், என்னை பாடம் கவனிக்க இயலாமல் செய்தவள்.
  4. இன்னும் முற்றுபெறாத ஓவியமாய், நினைவறிந்த வயதிலிருந்து நானறிந்த பெண்கள் அனைவரின் சாயலையும் உள்வாங்கி, என் கற்பனை எனக்குள் வரைந்துகொண்டே இருக்கும் என் dream girl!

பிடித்த இடங்கள்:
  1. எங்கள் கிராமம்(சோழன்குடிக்காடு).
  2. என்னில் பெரிதும் மாறுதல்களை ஏற்படுத்திய A.V.C கல்லூரியும் அதனை சார்ந்த இடங்களும்.
  3. பாட்டி வீட்டின் பின்புறம், முன்பிருந்த நந்தவனம்.
  4. மயிலாடுதுறை கச்சேரி தெருவில் நாங்கள் தங்கியிருந்த மொட்டைமாடி ஒற்றை அறை.

பிடித்த சுற்றுலா தலங்கள்:
  1. கங்கைகொண்டசோழபுரம் கோயில்.
  2. மாமல்லபுரம்.
  3. கொடைக்கானல்.
  4. சென்றுவந்த எல்லா அருவிகளும்.

செல்ல விரும்பும் இடங்கள்:
  1. அந்தமான்.
  2. மாலத்தீவுகள்.
  3. நயாகரா.
  4. இலங்கை.
மிகவும் பத்திரப்படுத்தி வைத்திருப்பவை:
  1. Packet size notebook-லிருந்து அவசரமாய் எழுதி, கிழித்துப் பின் கசக்கி எறியப்பட்ட - எனக்கு வந்த முதல் காதல் கடிதம்!
  2. நண்பர்கள் autograph எழுதிக்கொடுத்த ஏடுகள்.
  3. என் பதின்ம வயதுகளில் சிலவற்றை பதிவுசெய்து வைத்திருக்கும் நாட்குறிப்புகள்.
  4. இப்போதும் என்னை ஆச்சர்யப்படுத்தும், சின்ன வயதில் நான் வரைந்த சில ஓவியங்களும் எழுதிய சில கதைகளும்.
என்னுடன் நிரைய்ய்ய்ய்ய்ய்ய பேசிய தோழர்கள்:
  1. அப்பா.
  2. புருஷோத்தமன்(குழலி).
  3. சுந்தரமூர்த்தி.
  4. வீரமணி.
என்னுடன் நிரைய்ய்ய்ய்ய்ய்ய பேசிய தோழிகள்:
  1. திருமதி A. சுகன்யா.
  2. திருமதி V. ஜானகி.
  3. திருமதி S. வசந்தி (என் தங்கை).
  4. திருமதி B. பூரணி.
என்றும் மறக்க இயலாத நினைவுகள்:
  1. விடுமுறை நாட்களில் கிராமத்தில் விளையாடிக்களைத்த எங்களின் கால்களை மடியில் போட்டு, பாதத்தில் விளக்கெண்ணை தேய்த்து, ராஜா ராணி கதைகள் சொல்லி, எங்கள் பாட்டி எங்களை சுகமாய் தூங்க வைத்த இரவுகள்.
  2. பள்ளியில் அமைதியாய் இருக்க பலமுறை பணிக்கப்பட்டும், கட்டுப்படுத்தவே முடியாமல் புருஷொத்தமனுடன் பேசிப்பேசி அடிவாங்கிய ஆசிரியர் வராத வகுப்புகள்.
  3. நானும் நண்பன் தர்மராஜனும் மிக விரும்பி கஷ்டப்பட்டு நடத்திய இளந்தூது ஏழாம் ஆண்டு விழா.
  4. இளங்கலை படிப்பு முடித்து, கதறி அழுதபடி நண்பர்களை பிரிந்து ஊர்திரும்பிய ஒரு மதிய பொழுது.

இன்னும் படிச்சிட்டு இருக்கீங்களா?!!! நிஜமாவே thanks-ங்க!

இத்தொடரில் நான் இணைக்க விரும்பும் நபர்கள்:
  1. புருஷோத்தமன் (குழலி பக்கங்கள்)
  2. பத்மப்பிரியா (சிறகுகள்) - சில மாதங்களாக இவரை இங்கே காண இயலவில்லை. ஒருவேலை பார்த்தால் எழுதட்டும்.
  3. முகமூடி
  4. நிவேதா (ரேகுப்தி..!!)

நன்றி.


Read More