என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

06 May 2005

மங்கையர்க்கரசி

உறவுகள் எல்லாம்
முறை சொல்லியே
அழைக்கும் அம்மாவை

பெயர் சொல்லியழைக்க
அலுவலக நண்பருமில்லை
அடுக்களை தாண்டாத அவளுக்கு

அப்பா பெயருக்கு கடிதமெழுதி
அம்மாவை விசாரிக்கும்
பிறந்தவீடு தவிர
கடிதம் எழுதவும்
ஆளில்லை அவளுக்கு

அசைகின்ற சொத்துக்கள்
அம்மாவை அலங்கரித்தாலும்
பெயர்சொல்லும் அசையாத சொத்துக்கள்
அப்பாவின் பெயர் தாங்கியே

அவசர மளிகைக்கு
பாத்திரம் நீட்டும்
அடுத்தாத்து மாமியும்
'குமார் அம்மா' என
என் பெயர் இழுப்பாள்
அம்மாவை அழைக்க

திடீரென யாரேனும் கேட்டால்
சற்று யோசித்துதான்
சொல்லவேண்டியிருக்கிறது
பல வருடங்களாய்
பயன்படுத்தப்படாத
அம்மாவின் பெயரை
Read More