என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

12 December 2006

எங்க கிராமத்துல... 1

ந்த நிழற்படங்களெல்லாம் எங்கள் கிராமத்தில் நான் எடுத்தது. எங்கள் ஊர்: சோழன்குடிக்காடு கிராமம், பெரம்பலூர் மாவட்டம். படங்களைப் பெரிதாகக் காண, படங்களின் மீது க்ளிக் செய்யுங்கள்.

ஊர்க்காவலன்

ஊர்க்காவலர்கள்

கழிநி தொட்டி மற்றும் சிதிலமடைந்த எங்கள் சேறுபட்டறை

சேறுபட்டறையின் வேறு சில கோணங்கள்

என் அக்கா மகள்

சமீபத்தில் இந்தப் பூக்களையும் எங்கள் ஊரில் பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள். எரியும் தழல் போன்ற இதன் அமைப்பு ரொம்பவும் பிடித்துவிட்டது.

மேலே குறிப்பிட்ட சேறுபட்டறை என்பது தானியக் கிடங்கு. இரண்டு தலைமுறைகளுக்கு முன் செழித்திருந்த எங்கள் குடும்பத்தின் விவசாயமும் இன்று கவனிக்க ஆளில்லாமல் இப்படித்தான் இருக்கிறது :(

இந்தக் கிடங்கின் நடுவில் ஒரு வாசல் இருக்கும்(படத்தில் இருப்பது). அதனுள்ளே சென்று மேலே ஏரி, ஒரு பக்கத்துக்கு ஆறு என்று இரு பக்கமும் இருக்கும் பன்னிரண்டு அறைகளுக்கும் செல்லலாம். ஒவ்வொரு அறையின் மேலேயும் ஒரு ஆள் இறங்குமளவிற்கு சின்ன வாசல் இருக்கும். இந்த அறைகள், தானியங்கள் கெட்டுப் போகாவண்ணம் பாதுகாப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும்.

எங்கள் பெரிய தாத்தா சிரத்தையெடுத்து கட்டிய இவற்றின் இன்றைய இந்த நிலமைக்கு, படித்துவிட்டு கிராமத்தை விட்டு விலகிய நானும் ஒரு காரணம் என நினைக்கும்போது மனதை ஏதோ செய்கிறது :(

Read More