என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

14 February 2007

காதலைக் காப்பாற்றியவர்கள்

நீ
என்னை மணந்தால்
தன்னை மாய்த்துக்கொள்வதாய்ச் சொன்ன
உன் அம்மா

உன்னோடு வந்தால்
இந்த வாசல் மிதிக்காதே
என்று மிரட்டிய
என் அப்பா

என் தங்கைகள்
வாழ்வு பற்றி
திடீர் அக்கரை கொண்ட
எங்கள் சுற்றம்

உனது
மற்றும்
எனது
சாதி சனம்

திருமணம் தடுத்து
காதலைக் காப்பற்றிய
இவர்கள் அனைவர்க்கும்
நம் காதல் சார்பாக
மனமார்ந்த நன்றிகள்!

19 மறுமொழிகள்:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\திருமணம் தடுத்து
காதலைக் காப்பற்றிய//

:)) உண்மைதான்.

நாமக்கல் சிபி said...

அட! நல்லா இருக்கே!

//திருமணம் தடுத்து
காதலைக் காப்பற்றிய
இவர்கள் அனைவர்க்கும்
நம் காதல் சார்பாக
மனமார்ந்த நன்றிகள்!
//

சூப்பர்!

We The People said...

//திருமணம் தடுத்து
காதலைக் காப்பற்றிய
இவர்கள் அனைவர்க்கும்
நம் காதல் சார்பாக
மனமார்ந்த நன்றிகள்!
//

எஸ்கேப் ஆனதை என்னமா கவிதையா சொல்லியிருக்கீங்க!

பேஷ்! பேஷ்!! ரொம்ப நன்னா இருக்கு!

அருள் குமார் said...

நன்றி லட்டுமி!

நன்றி சிபி!

ஜெய்,
உங்க அப்பா அம்மா உங்கள காப்பாத்தாம விட்டுட்டாங்களேன்னு நீங்க ஃபீல் பண்றது புரியுது :)

பரவாயில்ல விடுங்க :))

We The People said...

//உங்க அப்பா அம்மா உங்கள காப்பாத்தாம விட்டுட்டாங்களேன்னு நீங்க ஃபீல் பண்றது புரியுது :)//

;) ஆனாலும் நீங்க ரொம்ப ஜூட்டிப்பு தான்! மேட்டரை கப்புன்னு புடிச்சுட்டீங்களே!!!

Unknown said...

"வலி"மையானக் காதலோ?

Anonymous said...

indha yadhartha kavaithaikku nandri...
unmai than...kadhalargal-in vazhi thadangal veru veragi pona pinnal than avargal-in kadhal nadandha padhai azhiyamal nilaithu pogiradhu.

R.kumar

பொன்ஸ்~~Poorna said...

//திருமணம் தடுத்து
காதலைக் காப்பற்றிய//
அந்தத் தாய்க்குலத்தையும் ;)

அருள் குமார் said...

//அந்தத் தாய்க்குலத்தையும் ;)//

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க. காதலர் தினமும் அதுவுமா எவ்ளோ ஃபீல் பண்ணி கவிதை எழுதியிருக்கேன் :(

பொ.க.ச. ஆரம்பிச்சாத்தான் சரியா வரும்போலிருக்கு.

சென்ஷி said...

அடடா!
என்ன ரசனை....
திருமணம் நின்றதால் காதல் தப்பித்ததா..
இல்லை காதலனா....


:)))))

சென்ஷி

surya said...

intha varigal
kathal thortathinal
kopathinal yeluthiyatha..?
kaikoodatha
athangathinal yeluthiyatha...?
illai
thappithu vitta
santhoshathinal yeluthinatha...?

அருள் குமார் said...

நீங்கள் சொன்ன எதுவும் இல்லை சூர்யா!

காதல்திருமணத்திற்குப்பின் காதலைத் தொலைத்துவிட்ட நண்பர்களைப் பார்த்து புரிந்துகொண்டது :)

surya said...

unmaiyana kathal yendral
kathaladunan ana thirumanathilum tholaiyathu
kalaththin kattayaththal
aal marippona thirumanathinalum
kalthal
yendrum tholaiyathu

அருள் குமார் said...

உண்மையான காதல் பொய்யான காதல் என்றெல்லாம் இல்லை சூர்யா! நாம் அரிதாய் நினைக்கிற எதுவும் நமக்கு கிடைத்தபின் அதன் மதிப்பினை இழக்கத் தொடங்கிவிடுகிறது அல்லது அதன் மதிப்பினை நாம் அறியத்தவறிவிடுகிறோம். உண்மையான காதல் உட்பட!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்...காதலிப்பது போல் நடித்தால் அது காதல் இல்லை. மத்தபடி உண்மைக்காதல் பொய்க்காதல் என்று காதலில் வகையெல்லாம் இல்லை என்பது சரிதான்.
\\ நாம் அரிதாய் நினைக்கிற எதுவும் நமக்கு கிடைத்தபின் அதன் மதிப்பினை இழக்கத் தொடங்கிவிடுகிறது அல்லது அதன் மதிப்பினை நாம் அறியத்தவறிவிடுகிறோம். உண்மையான காதல் உட்பட!//

உண்மைதான்.

சுந்தர் / Sundar said...

Let me know how to escape .?

Good one and Nice .

அருள் குமார் said...

ரொம்ப simple சுந்தர். காதலிக்கிற பொண்ண கல்யானம் பண்ணிக்காதீங்க ;)

ramgoby said...

திருமணம் தடுத்து
காதலைக் காப்பற்றிய
இவர்கள் அனைவர்க்கும்
நம் காதல் சார்பாக
மனமார்ந்த நன்றிகள்!

மிகவும் அருமை அருள் ...தொரர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்


http://vrfriendz.com/groups/forum/posts/id_504/

ramgoby said...

திருமணம் தடுத்து
காதலைக் காப்பற்றிய
இவர்கள் அனைவர்க்கும்
நம் காதல் சார்பாக
மனமார்ந்த நன்றிகள்!


மிகவும் அருமை
அருள் ...தொரர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

http://vrfriendz.com/groups/forum/posts/id_504/