என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

24 June 2005

மனசுக்குள்...

நித்தம் நிழலாய்
அவனின் தொடரல்

காவியமாய் நினைத்தெழுதும்
கிறுக்குத்தனமான கவிதைகள்

பண்டிகைகளுக்காய் காத்திருந்து தரும்
வாழ்த்து அட்டைகள்

பிறந்தநாளன்று வரும்
பிடிக்காத பரிசுப்பொருள்

இவையனைத்தும் அவனில்
எனக்கு எரிச்சலூட்டினாலும்

ஒருவனை கவர்ந்துவிட்ட
கர்வம் தரும்
மனசுக்குள் ஒரு
மெளனமான பூரிப்பு...!

4 மறுமொழிகள்:

சிவா.. said...

Last four lines are really fantastic.....

Sivasu

பொன்ஸ்~~Poorna said...

நல்லா இருக்கு அருள்..

அணைத்தும் => அனைத்தும் :)

அருள் குமார் said...

//அணைத்தும் => அனைத்தும் :) //
மாத்தியாச்சுங்க :)

என் எல்லா பதிவுகளிலும் எழுத்துப்பிழைகளை சரிசெய்து தருவதாக ஒருவர் சொன்னார். அதனால் அலட்சியமாக விட்டுவிட்டேன் ;)

சாத்வீகன் said...

---ஒருவனை கவர்ந்து விட்ட கர்வம்---

பெண்ணின் மனதை படிக்க அறிந்தீர்களோ ?