என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

29 June 2005

அறிமுகம்

கைகுலுக்கி
பெயர் சொல்லி
புதிதாய் அறிமுகமாகிற
எவரின் பெயரும்
உடனே நினைவில்
பதிவதில்லை எனக்கு.

சந்திப்பின் முடிவில்
மன்னிக்கச் சொல்லி
மறுபடி பெயர் கேட்டு
மனதில் பதிப்பேன்.

நீ எனக்கு
அறிமுகமானதும்
அப்படித்தன்.

அதன்பின்
புதுப்படம் பார்த்து - அதை
பிய்த்து அலசிய பொழுதுகள்;

புது நாவல் படித்து
அதற்கு
புது முடிவு தேடிய பொழுதுகள்;

சமூகச் சமுத்திரத்தை
சர்ச்சை வலை போட்டு
சலித்தெடுத்த பொழுதுகள்;

நான் நினைத்ததை நீயும்
நீ நினைத்ததை நானும்

பேச்சிலும்
பார்வையிலும்
அசைவிலும்

உணர்ந்த
உணர்த்திய பொழுதுகள்...

இப்படி
நம் எண்ணங்களின்
அலைவரிசை
ஒன்றெனச்சொல்லிய
அற்புத பொழுதுகளில்

நீ
என்னுள் நுழைந்த
பொழுது எது?

5 மறுமொழிகள்:

Maravandu - Ganesh said...

நீ எனக்கு
அறிமுகமானதும்
அப்படித்தன்.
*****************
கவிதையை இத்தோடு நிறுத்தியிருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும்

குழலி / Kuzhali said...

வாங்க வாங்க

அருள் குமார் said...

என் உணர்வுகளுக்கு மதிப்பளித்த கணேஷ், குழலி, சக்தி இவர்களுக்கு என் நன்றி.

சத்தியா said...

நன்றாக இருக்கிறது கவிதை.

அருள் குமார் said...

நன்றி சத்தியா.