நீ
என்னை மணந்தால்
தன்னை மாய்த்துக்கொள்வதாய்ச் சொன்ன
உன் அம்மா
உன்னோடு வந்தால்
இந்த வாசல் மிதிக்காதே
என்று மிரட்டிய
என் அப்பா
என் தங்கைகள்
வாழ்வு பற்றி
திடீர் அக்கரை கொண்ட
எங்கள் சுற்றம்
உனது
மற்றும்
எனது
சாதி சனம்
திருமணம் தடுத்து
காதலைக் காப்பற்றிய
இவர்கள் அனைவர்க்கும்
நம் காதல் சார்பாக
மனமார்ந்த நன்றிகள...
காதலைக் காப்பாற்றியவர்கள்
அருள் குமார்
Wednesday, February 14, 2007
19 comments
Edit
Read More