என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

13 September 2006

இழந்த கவிதைகள்...

ல்லோரைப் போலவே
என்னிடமும் உண்டு
சில கவிதைகள்

உங்கள் ஊடகங்களுக்கான
மொழியில் இல்லை அவை

அர்த்தங்கள் சிதையும்
மொழிபெயர்ப்பிலும் சம்மதமில்லை

இருந்துவிட்டுப் போகட்டும்
என் கவிதைகள்
எனக்கும்
என் உடன் சேர்ந்து
உணர்ந்தவர்களுக்கும்
இடையில் மட்டுமே!

பின்குறிப்பு: நண்பர்களின் விமர்சனங்களுக்குப் பின், சில திருத்தங்கள் செய்யப்பட்ட மீள்பதிவு. ம்..! எப்படியோ... என் வலைப்பதிவு வரலாற்றிலும் ஒரு மீள்பதிவு ;)

9 மறுமொழிகள்:

பொன்ஸ்~~Poorna said...

நல்ல கவிதை அருள்...

ப்ரியன் said...

/*இருந்துவிட்டுப் போகட்டும்
என் கவிதைகள்
எனக்கும்
என் உடன் சேர்ந்து
உணர்ந்தவர்களுக்கும்
இடையில் மட்டுமே!*/

கிளாசிக் அருள் :)

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா.. தல, ஜோதியில ஐக்கிய மாகிட்டீங்க...
//உங்கள் ஊடகங்களுக்கான
மொழியில் அவை இல்லை//
இது இப்படி இருந்தால்..
**உங்கள் ஊடகங்களுக்கான
மொழியில் இல்லை அவை**
நல்லா இருக்காதா?

அருள் குமார் said...

பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி :)

//இது இப்படி இருந்தால்..
**உங்கள் ஊடகங்களுக்கான
மொழியில் இல்லை அவை**
நல்லா இருக்காதா? //

ஆமா தல, நானும் அப்படி யோசிச்சேன். ஆனா அடுத்த இரண்டு வரிகளோட சேர்த்து படிக்கறப்போ அது சரியா வரலன்னு தோணுச்சி... அதனால மாத்திட்டேன் :)

பழனி said...

அருமை அருள் ...

./பழனி

RBGR said...

//என்னிடமும் உண்டு
சில கவிதைகள//

மற்றவை எப்பொழுது...?

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மிக அற்புதமான கருத்தாக்கம். உங்கள் கவிதைகளின் ரசனை மேலும் படிக்க தூண்டுகிறது. இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.

இருந்துவிட்டுப் போகட்டும்
என் கவிதைகள்
எனக்கும்
என் உடன் சேர்ந்து
உணர்ந்தவர்களுக்கும்
இடையில் மட்டுமே!

அருள் குமார் said...

நன்றி முத்துக்குமார்!

We The People said...

//என் கவிதைகள்
எனக்கும்
என் உடன் சேர்ந்து
உணர்ந்தவர்களுக்கும்
இடையில் மட்டுமே!//

என்னை தானே சொல்லறீங்க அருள் :)

பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு ;)